ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்தது.. சுப்ரீம் கோர்ட்
ஜெயலலிதாவின் சொத்துக்களைக் குறி வைத்தே அவரது வீட்டில் சசிகலா கும்பல் குடியிருந்ததாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி உள்ளிட்ட மூவரும் அடைக்கலம் புகுந்தது வாழ்வாதாரத்துக்கோ அல்லது ஜெயலலிதா தங்கச் சொன்னதற்காகவோ அல்ல. மாறாக அவரது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவர்கள் குடியேறியுள்ளனர் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பாக கூறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அதில் ஒரு முக்கிய அம்சம், ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்தான் அவரது வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குடியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது முக்கிய நோக்கமே சொத்துக்கள்தான் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுகுறித்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதா கொடுத்தது
ஏ2 (சசிகலா) மற்றும் ஏ4 (சுதாகரன்) ஆகியோர் தங்களுக்கு என்று சுயேச்சையான வருவாய் ஆதாரங்கள் இருப்பதாக கூறினாலும் கூட, அவர்கள் வைத்திருந்த நிறுவனங்கள், நிலங்கள், பணம் உளளிட்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, அவை அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) மூலமாக வந்தது தெரிய வருகிறது.

அனுமதித்த ஜெயலலிதா
ஏ2, ஏ3 (இளவரசி) மற்றும் ஏ4 ஆகியோர் ஏ1 வீட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலோ அல்லது ஏ1 அவர்களை தாராளமாக புழங்க அனுமதித்தார் என்பதற்காகவோ அந்த மூன்று பேரும் ஏ1 வீட்டில் தங்கவில்லை.

கிரிமினல் சதித் திட்டம்
மாறாக, ஏ1க்குச் சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் கிரிமினல் சதித் திட்டத்துடன்தான் இந்த மூன்று பேரும் அங்கு தங்கியிருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

சந்தேகமே இல்லை
பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் மூலம் இவர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications