நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளி கூட ஜெ.வுக்கு எடுக்கவில்லை.. ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சசிகலாவின் கணவர் நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற எடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவின் கணவரான நடராஜன் கிட்னி, கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அண்மையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக் என்ற மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்புகள் நடராஜனுக்கு பொறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

கணவரை சந்தித்த சசிகலா
இதைத்தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவரும் தனது கணவரை காண சசிகலா 5 நாள் பரோலில் சென்னை வந்துள்ளார். அவர் இதுவரை இரண்டுமுறை தனது கணவரை சந்தித்து நலம் விசாரித்து வந்துள்ளார்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதை போல நடராஜனை காப்பாற்ற சசிகலா குடும்பம் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பட்டியலிட்டார்.

துளிக்கூட முயசிக்கவில்லை
நடராஜனை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளில் துளிக்கூட ஜெயலலிதாவை காப்பாற்ற மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

சாத்தான் வேதம் ஓதுவதுபோல்
ஆனால் தினகரனோ அல்லது சசிகலா குடும்பத்தினரோ ஜெயலலிதாவுக்காக என்ன பிரார்த்தனை மேற்கொண்டனர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தினகரன் பேசுவதோ சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications