'சிறை' வைத்துள்ள எம்எல்ஏக்களுடன் ஆலோசனையை முடித்தார் சசிகலா.. நடந்தது என்ன?
சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்தார்.
சென்னை: சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேர ஆலோசனைக்கு பிறகு அவர் சென்னை புறப்பட்டார்.
அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.

இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார். எம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது.
மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக சசிகலா இன்று சந்தித்தார். அவர் அங்குள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனைக்கு பிறகு அவர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எம்எல்ஏக்களை தூண்டி விட்டு போராட்டத்தை தொடங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications