சிறைக்கு போனாலும் சசிகலா திருந்தவே மாட்டார்... ஜி. ராமகிருஷ்ணன் சுளீர்
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, திருந்தவே மாட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வாழ்க்கை வசதிகள் கொடுக்க சிறைத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ' சசிகலா திருந்தவே மாட்டார் என்பதற்கு இதுதான் உதாரணம்' என்று தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, கடந்த வாரம் அச்சிறையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து அவருக்கு தெரிய வந்தது. பின்னர் அது தொடர்பாக அவர் மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். சிறையில் வசதிகளை கொடுக்க சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்றும் புகாரில் ரூபா கூறி அதிர வைத்திருந்தார்.

நாடு முழுவதும் பெரிய அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் இன்று இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளது. புகார் கூறிய டிஐஜி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், டிஐஜி ரூபா கூறிய புகாருக்கு வலு சேர்க்கும் வகையில் சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. சசிகலா சொகுசாக இருக்கும் சிறை அறைகளின் படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "தமிழக அரசியல் உலகை ஊழல் மயமாக்கிய குடும்பம் சசிகலா குடும்பம். அதை இப்போது மீண்டும் அவர் நிரூபித்து உள்ளார்.
பொதுவாக தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலத்திலும் கையூட்டு பெற்றுக் கொண்டு சிறை அதிகாரிகள் செயல்படுவது வழக்கமாக உள்ளது. அது பெங்களூருவிலும் நடந்துள்ளது. எனவே, இதற்கு உடைந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு செய்துவிட்டு தண்டனை பெரும் நிலையில், சசிகலா மேலும் மேலும் குற்றம் செய்கிறார். இந்த தவறுகள் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று சசிகலா செயல்படுவதற்கு அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
-
பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications