விஷ்ணுபிரியா என்னுடைய 'ஐஏஎஸ் மேட்'.... அதிரடி காட்டும் சசிகலா புஷ்பா...!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தம்முடன் ஐஏஎஸ் படித்தவர் என்றும் எந்த ஒரு தலைவரையும் யாரும் பின்னாடி இருந்து இயக்கக் கூடாது எனவும் ராஜ்யசபா எம்.பி. சசிகலா தெரிவித்துள்ளார்.
போலி முன்ஜாமீன் மனு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராவதற்காக நள்ளிரவு சென்னை வந்தார் சசிகலா புஷ்பா. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:

- நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்து ஆஜராக குடும்பத்துடன் வந்துள்ளேன்.
- இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.
- நீதிமன்றம் முடித்துவிட்டு செல்லும் வரை எதுவும் சொல்ல முடியாது.
- டெல்லி நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளது.
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழங்குவார்கள் என நினைக்கிறேன்.
- ஒரு எம்.பி.யாக இருந்தால் 4 ஆண்டுகளுக்கு எந்த கட்சியிலும் நான் சேர முடியாது என்பது சட்டம்.
- ஆகையால் பிற கட்சியில் சேருவது பற்றி இப்போது பேச வேண்டாம்.
- எனது நடவடிக்கைகள் என்ன என்பதை போக போக பொறுந்திருந்து பாருங்கள்.
- ஒருவர் குற்றம்சாட்டினால் மற்றொருவர் மறுப்பது ஜனநாயகத்தின் இயல்பு தான்.
- பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பும் மரியாதையும் வேண்டும்.
- பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ஊடகங்கள் தான் சரியான பணியை செய்து வருகின்றன.
- ஊடகங்கள் பாதுகாப்பு தருவீர்கள் என்று நம்பி தான் நான் வந்தேன். நீங்கள் சரியாக செயல்பட்டதால்தான் நான் இங்கு நடமாட முடிந்தது. உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள். களங்கப்படுத்தாதீர்கள்.
- சுவாதியாக இருக்கட்டும் விஷ்ணு பிரியாவாகட்டும் யாரையும் களங்கப்படுத்தாதீர்கள்.
- தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி விஷ்ணு பிரியா என்னுடன் ஜ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்த பெண்.
- பெண்களை கவுரப்படுத்தி மரியாதையுடன் அரசுப் பணியை செய்ய வழிவிட வேண்டும்.
- நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை.
- எந்த கட்சியாகவும் இயக்கங்கள், தலைவராகவும் யாராக இருந்தாலும் தானாக இயங்க வேண்டும்.
- சூரியன் தானாக இயங்குகிறது. பின்னால் ஒருவர் இருந்து இயக்க கூடாது.
- பின்னால் இருந்து இயக்குபவர் பெயரை கேட்டால் நன்மை இருக்காது. அது கட்சிக்காரர்களுக்கும் சரி என்னை போன்ற பெண்களுக்கும் சரி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications