மாணவர்களை ஊக்குவிக்க கலையருவி திருவிழா திட்டம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
பள்ளிக்குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது பள்ளிக்கல்வித்துறை
சென்னை : மாணவர்களின் கலைத் திறமையை ஊக்குவிக்கவும், பாரம்பாரிய கலைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு தனித் திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகினறன. தற்போது புதிய முயற்சியாக இந்தாண்டு முதல் புதிய போட்டிகள் 'கலையருவி திருவிழா' என்கிற பெயரில் நடத்தப்பட உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வட்டார அளவிலான 21 போட்டிகளும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 25 போட்டிகளும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு 86 போட்டிகளும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 91 வகைப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இதில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், பறை, களரியாட்டம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் மற்றும் பழங்கால இசை வாத்தியங்களை வாசிப்பது தொடர்பான போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி மாவட்டம், மாவட்டம், மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் 5 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். டிசம்பரில் இறுதி போட்டி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கலை போட்டி அறிவிப்புகளால் மாணவ, மாணவிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications