பிக்கப் ஆகும் குற்றாலம் சீசன்.. குவியும் அரிய வகை பழங்கள்.. குஷியில் சுற்றுலா பயணிகள்!
குற்றாலத்தில் அரிய வகை பழங்கள் குவிந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை: குற்றாலத்தில் சீசன் அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் கடை வீதிகளில் நேரத்தை செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். அதனால் இங்கே உள்ள பழக்கடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இங்கு மலைப்பகுதியில் விளையும் அரிய வகை பழங்கள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதியில் மங்குஸ்தான், ராப்பட்டான், துரியன் பழங்கள் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இது தவிர பெங்களூரா, இமா்ம் பசந்த், நீலம் உள்ளிட்ட மாம்பழ வகைகள், நாடு, பச்சை, கதலி, கற்பூரவல்லி, மலை வாழை, பூவன், நேந்திரம் உள்ளிட்ட வாழை பழ வகைகளும், கொய்யா, பன்னீர் கொய்யா, நெல்லி, காட்டு நெல்லி, நாவல் பழம், மனோரஞ்சிதம், அத்தி, பிளம்ஸ், செர்ரி பழங்கள் உள்ளிட்டவையும் விற்பனைக்காகக் குவிந்து வருகின்றன.
இவற்றில் மங்குஸ்தான், ராப்ட்டான், துரியன் வகை பழங்களுக்கு அதிக கிராக்கி உள்ளது. துரியன் பழங்கள் மலட்டு தன்மையை நீங்கும் மருந்தாகவும் பயன்படுகிறது என்பதால் இது அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது.
மங்குஸ்தான் கிலோ ரூ.250க்கு விற்கப்படுகிறது. ரப்ட்டான் கிலோ ரூ.150க்கு விற்கப்படுகிறது. தற்போது சீசன் ஆரம்ப நிலையில் இருப்பதால் விற்பனை சூடு பிடிக்கவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் சீசன் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது விற்பனை நல்ல நிலையில் இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications