For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் கொலையாளிகளை சிறையில் சந்திக்க எவரையுமே அனுமதிக்காத வைகோ...

By Mathi
Google Oneindia Tamil News

தம்பிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் நீங்களே காத்ததாகத் தேர்தல் பரப்புரையில் திரும்பிய பக்கம் எல்லாம் சுவரொட்டிகள். மூவரையும் காக்க முழுமுதற் காரணம் நீங்களாகவே இருக்கலாம்.

யார் யாரோ இருக்கும்போது நீங்கள் இருப்பதில் தவறில்லை அண்ணா. திருநெல்வேலி மாநாட்டில் ‘மூன்று பேர் உயிர் காத்தேன்' என நீங்களே புத்தகம் எழுதி வெளியிட்டீர்கள். நீங்கள் ஒன்றரை ஆண்டு பொடா சிறையில் இருந்தபோது, உங்களைச் சந்திக்க வந்த ஒருவரையாவது அந்தத் தம்பிகளைச் சந்திக்க நீங்கள் அனுமதித்தது உண்டா?

seeman Attacks Vaiko

‘21 வருடங்களாகச் சிறைக்குள் வாடும் அந்தப் பிள்ளைகளைப் பார்த்து ஆறுதல் சொல்லுங்கள்' என எவரிடமாவது நீங்கள் சொன்னது உண்டா?

சிறையில் இருந்து மடல் மடலாக எழுதி அதனை மலராக்கினீர்களே...! அதில் ஒரு இடத்திலாவது தம்பிகளின் பெயரைக் குறிப்பிடுகிற தைரியம் இருந்ததா அண்ணா உங்களுக்கு? ஆனால், இன்றைக்கு அரசியல் அறுவடைக்கு அதே தம்பிகளின் பெயர்களைச் சொல்ல வேண்டிய சூழல் உங்களுக்கு வந்துவிட்டதே!

காலம் திரும்புகிறது என இதனைக் கணக்கில் கொள்ளலாமா அண்ணா! ‘

English summary
Director Seeman and Founder of naam thamizhar party attacks MDMK leader Vaiko for his alliance with BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X