சிறு, குறு தொழில்களை நசுக்கும் ஜிஎஸ்டி வரி... கொந்தளிக்கும் சீமான்
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியினால் சிறு மற்றும் குறு தொழில்கள் நலிவடைந்து போய் விடும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியினால் அதிகம் பாதிக்கப்படுவது சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள்தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரியினால் சமான்ய மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல உள்ளது. நாம் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு வரி விதிக்கிறது. இதனால் மாநில அரசுகளுக்கு எந்த பயனும் இல்லை. எது வேண்டும் என்றாலும் மத்திய அரசை எதிர்பார்க்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரியினால் பெரிய நிறுவனங்களுக்கு தான் நன்மை. சிறு, மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பலன் ஏதுமில்லை அவரை நசிந்து விடும் என்றார்.
சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு கேளிக்கை வரி விதித்துள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
ஹோட்டல்களில் அதிக வரி, எதற்கெடுத்தாலும் வரி போட்டால் சாமானிய மக்கள் என்ன செய்வார்கள். ஜிஎஸ்டியினால் ஏழை மற்றும் சாமானிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications