கோவை அருகே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானை... மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு
கோவை: கோவை அருகே ஊருக்குள் சுற்றித்திரியும் ஒன்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
கோவையை அடுத்துள்ள கோவைப்புதூர், அறிவொளி நகர், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக வந்த ஒரு ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. இதனால், எப்போதும் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளதால், தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

வழக்கமாக கோடை காலங்களில் வனப்பகுதியில் ஏற்படும் வறட்சி காரணமாக, வன விலங்குகள் ஊருக்குள் புகுவது வழக்கமான நிகழ்வு தான். ஆனாலும், மழை பெய்யத் தொடங்கியதும் அவைகள் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிடும். இப்படித்தான், ஒரு காட்டு யானைக் கூட்டமும் சமீபத்தில் ஊர்ப்பகுதியில் புகுந்தது. அந்த கூட்டத்தில் மற்ற யானைகள் அனைத்தும் வனப் பகுதிகளுக்குள் சென்றுவிட்ட நிலையில், ஒரே ஒரு யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து ஊர்ப் பகுதியில் சுற்றித் திரிகிறதாம்.
இதனால் அந்த ஒற்றை யானையை வனப்பகுதியில் விரட்ட வனத்துறை அதிகாரிகளால் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ஒற்றை யானையைப் பிடிக்கவில்லை என்றால் ஜூன் 10-ந் தேதி மண்டல வனப் பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, அந்த ஒற்றை யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்குமாறு மாநில முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications