ரஜினி மகள் சௌந்தர்யா ஓட்டிய கார் மோதி விபத்து - ஆட்டோ டிரைவர் காயம்
நடிகர் ரஜினி காந்த் மகள் சௌந்தர்யாக ஓட்டிச் சென்ற கார் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினி காந்த் மகள் சௌந்தர்யாக ஓட்டிச்சென்ற கார் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் சமாதானத்தை அடுத்து இந்த விபத்து குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இன்று அதிகாலையில் சௌந்தர்யா தனது காரில் ஆழ்வார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மணி காயமடைந்துள்ளார். அப்போது அந்த பகுதி மக்கள் உடனடியாக கூடினர்.

விபத்தை ஏற்படுத்தியது ரஜினி மகள் சௌந்தர்யா என்று தெரியவரவே பரபரப்பு அதிகரித்தது. உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு நடிகர் தனுஷ் வந்து சமாதான பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது.
ஆட்டோ சேதத்திற்குண்டான பொருட்செலவையும், டிரைவரின் சிகிச்சைக்குண்டான பணத்தையும் கொடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதற்கு சம்மதம் அளித்த பிறகே பிறகே, சவுந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் சமரச பேச்சுவார்த்தையிலேயே இந்த பிரச்சினை முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்கும் பிரபலங்களின் வாகனங்கள் அதிகாலையில் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. ஆடி கார் ஐஸ்வர்யா, அருண் விஜய் தொடங்கி இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் வரை விபத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications