அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. அவர் இழப்பு பெரும் வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறது.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தற்போது இவரின் மரணத்திற்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. தங்கள் இரங்கல் கடிதத்தில் "தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் '' அசோக்குமாரின் முடிவு திரைப்படதுறைக்கு கேள்வியை விட்டுச்சென்று இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
அதேபோல் "திரைப்படதுறை தன்னை சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இது ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கை மணி'' என்றும் கூறியுள்ளது.
மேலும் ''நம்முடைய சினிமா துறை பல உயரங்களை அடைந்து இருக்கிறது. ஆனால் இன்னமும் நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற கேள்வியை அசோக்குமார் மரணம் நமக்கு கேட்டு இருக்கிறது'' என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.