இந்த ஆண்டும் தென்மேற்கு பருவ மழை குறைவுதான்.. தமிழகம் இனி என்னவாகும்? விவசாயிகள் அதிர்ச்சி
கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சராசரியைவிட குறைவாகவே பெய்துள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: வானிலை மையம் அறிவித்தது போன்று கடந்த மே மாதம் 31ம் தேதி தென் மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது.
சென்ற ஆண்டுதான் பருவமழை சரியாக பொழியாமல் விவசாயிகளை பழிவாங்கிவிட்டது. இந்த ஆண்டாவது நன்றாக மழை பெய்து விவசாயம் சிறப்புறும் என்று விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
அதற்கேற்ப, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வார காலமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. என்றாலும் அது சராசரியைவிட குறைவாகவே உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

20 நாளில் சராசரியை விட குறைவு..
தென் மேற்கு பருவ மழை தொடங்கி 20 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், சராசரி அளவைக் காட்டிலும் குறைவான மழையே பதிவாகியுள்ளது.

மைசூரில்..
ஜூன் 17ம் தேதி நிலவரப்படி மைசூர் பகுதியில் 47 மி. மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 24 மி. மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரியைவிட 50 சதவீதம் குறைவானதாகும்.

கேரளாவில்..
அதேப் போன்று கேரள நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை கணிசமாக குறைந்துள்ளது.வயநாடு பகுதிகளில் 296 மி.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் அங்கு 147 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

தமிழகத்தில்..
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 77 மி.மீ மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 67 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரியைவிட 13 சதவீதம் குறைவாகும்.

கை கொடுக்காத அணைகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைத்தான் மழையை கொடுக்கும். என்றாலும் தென்மேற்கு பருவ மழை பொழிந்தால்தான் கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகள் நிரம்பும். அந்த அணைகள் நிரம்பினால்தான் தமிழக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

விவசாயிகள் அதிர்ச்சி
தென் மேற்கு பருவ மழை குறைந்துள்ள தகவல் விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டே பருவ மழை பொய்த்துப் போனதால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுதல்
எனினும் வானிலை ஆய்வு மையம் ஆறுதலான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறது. அதாவது, இரு தினங்களுக்கு பின்னர் தென் மேற்கு பருவ மழை பலமடைந்து கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications