பக்தி பரவசத்தில் கரூர்.. பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்.. 11வது ஆண்டாக கொண்டாட்டம்
கரூர் பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 11 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர்.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மிக உகந்த மாதமாகும். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து பூக்குழி திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் ஆழி (பூக்குழி) மற்றும் அன்னதான விழா 11 ஆம் ஆண்டு இன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பசுபதிபாளையம் அருகே பிரத்தியேகமாக பிரம்மாண்ட ஆழி (பூக்குழி) ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சியை ஐயப்ப பக்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து ஏழு கன்னிப் பெண்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தொடர்ச்சியாக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வரிசையில் நின்று ஆழி (பூக்குழி) திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.
அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் நடத்திய பூக்குழி திருவிழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் பெண் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications