தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: 5 புதுக்கோட்டை மீனவர்கள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்குவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள். மீன் பிடிக்கும் மீனவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களில் 5 பேரை சிறைபிடித்துள்ளனர்.
அந்த 5 பேரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி தங்களை மிரட்டியதாக கரை திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா என்று மீனவர்கள் தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications