54 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்தது இலங்கைக் கடற்படை.. பேச்சுவார்த்தை முன்பு அட்டகாசம்!
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி மொத்தம் 54 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுள்ளது இலங்கைக் கடற்படை. இதனால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு நாட்டு மீனவர்களுக்கிடையே சென்னையில் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இலங்கைக் கடற்படை செய்தித் தொடர்பார் இன்டிகா சில்வா கூறுகையில், காங்கேசன் துறை பகுதியில் 21 மீனவர்கள் 5 படகுகளுடன் பிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 5 படகுகளுடன் தலைமன்னார் பகுதியில் பிடிபட்டுள்ளனர் என்றார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications