எஸ்எஸ்எல்சி ரிசல்ட்: முதலிடம் பிடித்த இருவருக்கும், ஒரு மார்க் பறிபோனது எந்த பாடத்தில் தெரியுமா?
சென்னை: தமிழில் 1 மதிப்பெண் குறைந்ததன் காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த 2 மாணவர்களாலும் 500 மதிப்பெண்களை பெற முடியவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம், புதுவையில் 10.72 லட்சம் பேர் எழுதினர்.

தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. விருதுநகர் மாவட்டம், நோபல் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் ஆர்.சிவக்குமார் மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், எஸ்ஆர்வி எக்சல் பள்ளி மாணவி பிரேம சுதா ஆகியோர் தலா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
இவர்கள் இருவருமே தமிழில் 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். எனவேதான் 500க்கு 500 பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications