ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை கோரி ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரி மார்ச் 8-ம் தேதி முதல் ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் சார்பில் மதுசூதனன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், அதிமுக ஆட்சியை சட்டப்பூர்வ, அமைதியான ஜனநாயக புரட்சி மூலம் அகற்றி, திமுக ஆட்சியை நிலைபெற செய்வதே நமது ஒரே செயல்திட்டம் என சூளுரை ஏற்போம்.
அந்த சூளுரையே நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் இனி அடிநாதமாக அமையட்டும் என்று, இந்த நாளில் அறைகூவல் விடுக்கின்றேன் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும், அதற்கு எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மேலும் முதல்வர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? என்றும் இருப்பினும் ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications