இன்று மருந்துக் கடைகள் அடைப்பு... மக்கள் கேட்டால் கடையைத் திறந்து மருந்து தர உத்தரவு!
சென்னை: மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனாலும் பொதுமக்கள் கேட்டால் கடைகளை திறந்து மருந்துகள் வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆன்-லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் இன்று (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகளும், சென்னையில் 5 ஆயிரம் மருந்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து கடைகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகள் கிடைக்காமல் போய்விட கூடும் என்பதால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அப்துல்காதர் ஆகியோர் மருந்து வணிகர்கள் சங்கத்தினரை அழைத்து நேற்று தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய கூடாது என்ற எங்களின் கோரிக்கையை தமிழக அரசும் ஆமோதிக்கிறது. எங்களின் உணர்வுகளை அரசு மதிப்பதால், அச்சுறுத்தலோ, மிரட்டலோ எதுவும் இல்லை. கடைகளை திறக்கவும் அறிவுறுத்தப்படவில்லை.
கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு கடைகளை திறந்து மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே மருத்துவமனையில் இருக்கும் மருந்து கடைகளை மூட வேண்டாம் என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்தவகையில் சென்னையில் மட்டும் 200 கடைகள் திறந்து இருக்கும்.
அத்துடன் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில், மருந்து வணிகர்கள் சங்கத்தின் 60 உறுப்பினர்களின் செல்போன் எண்களை கொடுத்துள்ளோம். யாருக்கு மருந்து தேவைப்படுகிறதோ அவர்கள் உடனடியாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், உடனடியாக கடைகளை திறந்து மருந்துகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications