ஜிஎஸ்டி வரி எதிரொலி.. போர்க்களமான தென்மாவட்டங்கள்!
ஜிஎஸ்டி வரியால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தலை தூக்க துவங்கியுள்ளது.
கோவில்பட்டி ஜிஎஸ்டி வரியால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தலை தூக்க துவங்கியுள்ளது. கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. இதில் முக்கிய பொருட்களுக்கு குறிப்பாக பொது மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் திகைப்பில் உள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் போராட்டத்தில் களம் காண தயாராகி வருகின்றன. இரண்டு இட்லிக்கு ஜிஎஸ்டி வரி சேர்த்து 65 ரூபாய் வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சாதாரண காப்பிக்கு 40 வரை கொடுக்கப்படுவதாவும் பொது மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்நிலையி்ல் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலைகள் மூடப்பட்டன. இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இரண்டாவது நாளாக இயங்கவில்லை.
இதனால் ரூ.2 கோடி அளவிலான தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம் பண்னை, திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகள் தொடர்ந்து மூடிக்கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications