திருச்சியை தொடர்ந்து கோவையிலும் வெடித்தது மாணவர் போராட்டம்! விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்- கைது!!
திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி: விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 16வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே திரண்ட மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையிலும் கைது
இதனிடையே கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்ட மாணவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரைமணி நேரத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

நுழைவு வாயில் மூடல்
கோவை வஉசி மைதானம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் மைதானத்தின் நுழைவு வாயிலையும் போலீசார் இழுத்து மூடியுள்ளனர்.

தமுக்கத்திலும் போலீசார் குவிப்பு
மதுரையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என அஞ்சப்படுவதால் தமுக்கம் மைதானத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் கூடுகிறார்களா என்பதையும் போலீசார் தீவிமாக கண்காணித்து வருகின்றனர்.

போலீசாரின் கட்டுப்பாட்டில்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திய அனைத்து இடங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு வளையத்தில் மெரினா
ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

பொதுமக்கள் அச்சம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் போலீசார் திடீரென குவிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications