தூத்துக்குடி வந்த அண்ணன் விஜய்க்கு நன்றி.. ஸ்டண்ட் சில்வா உருக்கம்
தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் பாதிதத்தவர்களை நலம் விசாரித்த நடிகர் விஜய்க்கு சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் பாதிதத்தவர்களை நலம் விசாரித்த நடிகர் விஜய்க்கு சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நேற்று இரவு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு சென்று ஸ்னோலின் உள்ளிட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து உள்ளார். எல்லோர் வீட்டிலும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

யாரும் தெரியாத படி முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி அவர் துக்கம் விசாரித்துள்ளார். அவர் சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வாவின் தூத்துக்குடி இல்லத்திற்கும் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனர் கொல்லப்பட்டுள்ளார். அவரது தங்கையின் கணவர் செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் விஜய் அவர்கள் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
இது குறித்து சில்வா தற்போது டிவிட் செய்துள்ளார். அதில் ''எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச்சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி'' என்று உருக்கமாக எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications