For Quick Alerts
For Daily Alerts
Just In
எச். ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும்-சுப. வீரபாண்டியன்
எச் ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும் என்று சுப வீரபாண்டியன் தெரிவித்தார்.
Recommended Video
எச்.ராஜாவுக்கான போராட்டம் நிச்சயம் தொடரும்- வீடியோ
சென்னை: எச் ராஜா வருத்தம் தெரிவித்தாலும் அவருக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.
பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச். ராஜா நேற்று தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அந்த பதிவை எச் ராஜா நீக்கிவிட்டார்.
இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்தை நான் பதிவிடவில்லை என்றும் அதை எனது அட்மின் எனது அனுமதியின்றி பதிவிட்டுவிட்டார் என்றும் எச் ராஜா இன்று வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.
இன்று திமுக சார்பில் பூந்தமல்லியில் நடக்கவிருந்த போராட்டம் எச் ராஜா மன்னிப்பு கேட்டாலும் நடந்தே தீரும் என்று சுப வீரபாண்டியன் தெரிவித்தார். மேலும் அட்மின் பதிவு செய்தார் என்பதை ஏற்க முடியாது என்றும் சுப வீ தெரிவித்தார்.
Comments
English summary
Suba Veerapandian says that though H.Raja apologises for his comment on Periyar, protest will be continued.