இந்த நச்சுப் பாலைத்தானே 30 ஆண்டு காலம் குடித்தார் வைகோ.. சுப.வீ கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக நச்சு கலந்த பால் என்று கூறுகிறார் வைகோ. இந்த நச்சு கலந்த பாலைத்தானே 30 ஆண்டு காலம் அவர் குடித்துக் கொண்டிருந்தார் என்று கேட்டுள்ளார் சுப வீரபாண்டியன்.

சென்னை புரசைவாக்கத்தி்ல நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன். அப்போது அவர் கூறியதாவது:

Subavee slams Vaiko

திமுகவை விஷம் கலந்த பால் என்று வைகோ வர்ணித்து இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். திமுகவில் வைகோ இருந்த 30 ஆண்டு காலம் இந்த பாலைத்தான் குடித்துக் கொண்டு இருந்தார். விஷம் கலந்த பாலாக இருந்து இருந்தால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அப்படி பாதிப்பு எதுவும் நடக்கவில்லையே. எனவே அதுபோல் விமர்சிக்க வேண்டாம்.

உடுமலையில் கலப்பு திருமணம் செய்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டான். இந்த கொலையை கருணாநிதியும், ஸ்டாலினும் ஏன் கண்டிக்கவில்லை என்று கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முத்தரசன் கூறி வருகிறார். அவர் தெரியாமல் பேசுகிறார். இந்த கொலையை கருணாநிதியும், ஸ்டாலினும் கண்டித்து இருக்கிறார்கள் என்றார் சுப.வீரபாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+