தற்கொலை செய்ய கிணற்றில் குதித்து.. காப்பாத்துங்க... காப்பாத்துங்க என அலறிய ஞானப்பிரகாசம்!
தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
Recommended Video

கரூர்: தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்தவரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காப்பாற்றி உள்ளனர்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் 50. இவருக்கு நீண்ட நாட்களாக கடன் தொல்லை சிக்கிக் கொண்டு தவித்து வந்திருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஞானப்பிரகாசம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

அதன்படி ராமகிருஷ்ணபுரம் இருப்பாதையை நோக்கி விரைவாக நடந்தார். அங்கிருந்த பாழடைந்த கிணற்றை நோக்கி வந்து தொபுக்கென்று குதித்தார். ஆனால் குதித்த சில வினாடிகளிலேயே கிணற்றுக்குள்ளே இருந்து ஐயோ, என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் எழுந்தது.
பாழடைந்த கிணற்றிலிருந்து அபாய சத்தம் வருவதை கேட்ட அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், கிணற்றினுள் ஓடிவந்து எட்டிப்பார்த்தனர். அங்கே ஞானப்பிரகாசம் கிணற்றின் கால் அளவு இருந்த தண்ணீரில் நின்று கொண்டிருந்தார். கிணற்றில் நீர் குறைவாக இருந்ததால் அங்கிருந்த கற்கள் மீது மோதி ஞானபிரகாசத்துக்கு காயம் வேறு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியை பொறுக்க முடியாமலும், எப்படி மேலே வருவது என்று தெரியாமலும் விழித்துள்ளார் ஞானப்பிரகாசம். பின்னர்தான் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் கயிறு கட்டி ஞானப்பிரகாசத்தை மேலே கொண்டு வந்து சேர்த்தனர். அத்துடன் அவரை கொண்டு போய் காவல்நிலையத்திலும் ஒப்படைத்தனர். ஆனால் ஞானப்பிரகாசத்தின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாத போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் நீரின்றி கிணறு, குளங்கள் வற்றிக்கிடப்பதுகூட ஒரு சில நேரத்தில் சிலருக்கு நன்மைதான் போல!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications