துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு சம்மன்.. 'வராவிட்டால்' ஆள் இல்லாமலேயே விசாரணை தொடருமாம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களது போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.
அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் பேரணி சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

விசாரணை ஆணையம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

கிளாஸ்டன் பெயருக்கு சம்மன்
துப்பாக்கிச் சூட்டில் மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன் என்பவர் உயிரிழந்தார். அவர் நேரில் ஆஜராகுமாறு அவரது வீட்டுக்கு அவரது பெயரில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

29-ஆம் தேதி ஆஜராக உத்தரவு
இந்த சம்மனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வரும் 29-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் தாங்கள் இல்லாமலேயே விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறு நடந்துவிட்டது
உயிரிழந்தவரின் பெயருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நகல், வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது இறந்தவரின் பெயரை அடைப்புக்குறிக்குள் எழுதாததால் இதுபோன்ற தவறு நடந்துவிட்டதாகவும் அது கண்டுபிடிக்கப்பட்டு வேறு ஒரு சம்மன் அனுப்பப்பட்டு விட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications