எப்.எம். ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் மேல்முறையீடு தள்ளுபடி
சென்னை: எப்.எம் ரேடியோ ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என சன் குழுமத்திற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஹைகோர்ட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எப்.எம் ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதியளிக்காததை எதிர்த்து, அந்த நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், ஏலத்தில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நபர் அமர்வில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய அமர்வு, ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு செல்லும் என இன்று தீர்ப்பளித்தனர். மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
கிரிமினல் வழக்கு இருப்பதாலேயே எப்.எம். ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பது சரியல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications