'சென்னையில் இடியிடித்தால் இந்தியாவெங்கும் மழைபெய்கிறது'-முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து பாராட்டு
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்திய விடுதலைத் திருநாளில்
கொடியேற்றும் உரிமையை
முதலமைச்சர்களுக்கெல்லாம்
பெற்றுக்கொடுத்தார்
முத்தமிழறிஞர் கலைஞர்
யாம்பெற்ற உரிமை
பெறுக இவ்வையகம்
என்று உரிமையைப்
பொதுவுடைமை செய்தார்
அது அன்று
இதோ இன்று
இந்தியாவின்
எல்லா மாநிலங்களுக்கும்
உச்சநீதி மன்றத்தில் போராடி
உயர்கல்வி உரிமையைப்
பெற்றுத் தந்திருக்கிறார்
முதலமைச்சர் முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின்
தந்தை வழியில்
தனயன் சரித்திரம் எழுதுகிறார்
முன்னேறுகிறார்;
முதல்வர்களுள்
முதல்வர் ஆகிறார்
இவர் சென்னையில்
இடியிடித்தால்
இந்தியாவெங்கும்
மழைபெய்கிறது
இது
கூரான வெற்றி
மற்றும்
நேரான வெற்றி
உலகமே வாழ்த்துகிறது
எங்கள் உள்ளங்களும்
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications