இமயத்தை விட உயர்ந்த தமிழை பரப்ப வடக்கில் 500 சிறப்பு மையங்கள்!- தருண் விஜய்
சென்னை: இமய மலையை விட உயர்வான தமிழ் மொழியை வட மாநிலங்களில் பரப்ப முதல் கட்டமாக 500 சிறப்பு மையங்களை உருவாக்கப் போவதாக உத்தரகாண்ட் பாஜக எம்பி தருண் விஜய் கூறினார்.
தமிழுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் தருண் விஜய் எம்.பி.க்கு கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. விழாவில் தருண் விஜய் பேசியதாவது:
உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தாலும், தமிழ் அன்னையின் மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இலக்கியங்கள், காப்பியங்கள் நிறைந்த தமிழ் மொழியில் திருக்குறள் ஒரு பொக்கிஷமாகும். திருக்குறளையும், திருவள்ளுவரையும் தெரியாதவர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்திருக்க முடியாது. உலக அளவில் பெருமைப்படும் தமிழ் மொழி பிறந்த தமிழ்நாட்டிலேயே, தமிழ் மொழி பேச மறுக்கின்றனர்.

வழக்காடு மொழியாக தமிழ்
குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இல்லாதது வருத்தமளிக்கிறது. வடமாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. குஜராத்தில் குஜராத்தி வழக்காடு மொழியாக உள்ளது. தமிழகத்தில் தமிழில் தீர்ப்பு வழங்குவதில் என்ன தயக்கம்? பாமர மக்களுக்கு புரியாத மொழியான ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுவது வேதனை அளிக்கிறது.
தமிழ் இன்றி இந்தியா முழுமை பெறாது. அதே நேரம் தமிழர்கள் மீது வேறு மொழிகளைத் திணிப்பதும் சரியல்ல. தேசத்தின் பாரம்பரிய மொழிகள் காக்கப்பட வேண்டும்.
இமயமலையை விட உயர்ந்தது
இமயமலையை விட உயரமான தமிழ்மொழியை நாடு முழுவதும் எடுத்து செல்வதற்காக, முதல் கட்டமாக வட மாநிலங்களில் 500 இடங்களில் தமிழ்மொழி கற்பிக்கும் மையங்கள் வரும் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளன. அதுவும் டேராடூனிலிருந்தே முதல் மையம் தொடங்கப்படும். என் சொந்த ஊரில் தமிழ்ப் பள்ளியும் தொடங்கவிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications