100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்.. காவிரிக்காக எழும்பூரில் ரயில் மறியல்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகம் முழுக்க மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அங்காங்கே போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ரயில் தண்டவாளத்தில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள். 100க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. போலீஸ் இவர்களை குண்டுக்கட்டாக தூக்கி மறியல் போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர்.