காவிரிக்கு குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
சென்னை: காவிரிக்கு குறுக்கே கர்நாடகா அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரிக்கு குறுக்கே மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் பாறை) என்ற பகுதியில் இரு அணைகளை கட்டி சுமார் 48 டிஎம்சி தண்ணீரை சேகரிக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக அம்மாநில நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டீல் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே, இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில், காவிரியின் குறுக்கே மேலும் இரு அணைகளை கட்ட கர்நாடகம் தீர்மானித்து இருப்பதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதை தொடர்ந்து, காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் காவிரியில் கர்நாடகம் அணைகட்டுவது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கையில், காவிரிக்கு குறுக்கே கர்நாடகா புதிதாக ஒரு அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும், அணை கட்டுவதை தடுக்குமாறு பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா குடிநீர் திட்டங்கள், நீர்மின் திட்டங்களை காவிரி நதிநீரை பயன்படுத்தி செயல்படுத்த கூடாது என்றும் பிரதமருக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சகங்கள், கர்நாடகாவின் புதிய திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications