தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை - பல லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்கள் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 15 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ, மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 8 மணிநேரம் நடந்த சோதனையில் ரூ. 15 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
தீபாவளியை யொட்டி வசூல் வேட்டை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா உத்தரவின்படி நேற்று காலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 11 போக்குவரத்து அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை இணை சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டன.
சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற சோதனையில், ரூ.1.18 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.43 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 9 ஆயிரம் ரூபாயும், சிக்கியது.
நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.9 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.1.35 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ.3.58 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
இந்த சோதனையில் மட்டும் ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications