தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை - பல லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்கள் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 15 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ, மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 8 மணிநேரம் நடந்த சோதனையில் ரூ. 15 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
தீபாவளியை யொட்டி வசூல் வேட்டை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா உத்தரவின்படி நேற்று காலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 11 போக்குவரத்து அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை இணை சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டன.
சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற சோதனையில், ரூ.1.18 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.43 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 9 ஆயிரம் ரூபாயும், சிக்கியது.
நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.9 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.1.35 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ.3.58 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
இந்த சோதனையில் மட்டும் ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications