தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை - பல லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்கள் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 15 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ, மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 8 மணிநேரம் நடந்த சோதனையில் ரூ. 15 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
தீபாவளியை யொட்டி வசூல் வேட்டை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா உத்தரவின்படி நேற்று காலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 11 போக்குவரத்து அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை இணை சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டன.
சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற சோதனையில், ரூ.1.18 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.43 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 9 ஆயிரம் ரூபாயும், சிக்கியது.
நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.9 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.1.35 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ.3.58 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.
இந்த சோதனையில் மட்டும் ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications