காவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.. தீர்ப்பு குறித்து தமிழிசை பெருமிதம்!
காவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில் பாஜக தமிழகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்றது. மேலும் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பாஜக வந்தால் நியாயமான தீர்வும், நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.