பூச்சி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி... தமிழிசை விமர்சனம்
காவிரி வழக்கில் திமுகவின் கடந்த கால துரோக வரலாற்றை மறக்க முடியுமா என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: பூச்சி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காவிரி வழக்கு குறித்து மத்திய அரசை மு.க.ஸ்டாலின் குறை கூறினார். இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காவிரி வழக்கில் திமுகவின் கடந்த கால துரோக வரலாற்றை மறக்க முடியுமா.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசை குறை சொல்லும் மு.க.ஸ்டாலின் மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை.

பூச்சி மருந்து
சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்கு அடிபணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி.

காலதாமதம்
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் காலதாமதம் ஆன போது அமைதியாக இருந்தது திமுக ஆட்சி. இன்று நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் கால தாமதத்தை குறை கூறுகிறது.

குழப்பங்கள்
இறுதி தீர்ப்பில் உள்ள 12-க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், விடை காணமுடியாத கேள்விகள் என பலதரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பியுள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின்படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும்.
|
சிக்கலுக்கு காரணம் திமுக
இதை மறந்து மத்திய அரசை தினமும் குறை சொல்லும் திமுக செயல்தலைவர் அறிக்கை திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications