பூச்சி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி... தமிழிசை விமர்சனம்
காவிரி வழக்கில் திமுகவின் கடந்த கால துரோக வரலாற்றை மறக்க முடியுமா என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: பூச்சி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காவிரி வழக்கு குறித்து மத்திய அரசை மு.க.ஸ்டாலின் குறை கூறினார். இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காவிரி வழக்கில் திமுகவின் கடந்த கால துரோக வரலாற்றை மறக்க முடியுமா.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசை குறை சொல்லும் மு.க.ஸ்டாலின் மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை.

பூச்சி மருந்து
சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்கு அடிபணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி.

காலதாமதம்
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் காலதாமதம் ஆன போது அமைதியாக இருந்தது திமுக ஆட்சி. இன்று நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் கால தாமதத்தை குறை கூறுகிறது.

குழப்பங்கள்
இறுதி தீர்ப்பில் உள்ள 12-க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், விடை காணமுடியாத கேள்விகள் என பலதரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பியுள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின்படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும்.
|
சிக்கலுக்கு காரணம் திமுக
இதை மறந்து மத்திய அரசை தினமும் குறை சொல்லும் திமுக செயல்தலைவர் அறிக்கை திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications