பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்- தமிழிசை விளாசல்
பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள் என்று தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சென்னை: பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள் என்று தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னையில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது வன்முறையின் உச்சம் என்று ரஜினி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதே போராட்டத்தில் பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு ரஜினி கண்டிக்காதது குறித்தும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

பட்டவர்த்தனம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரம் குறித்து நேற்றைய தினம் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழன் அல்லாத கர்நாடக பாஜகவின் தூதுவர் ரஜினி என்று இப்போது பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இலங்கை தமிழர் விவகாரம்
மேலும் அவர் சாயம் மெல்ல மெல்ல வெளுக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழர், நியூட்ரினோ, மீத்தேன் பிரச்சினைகளில் ரஜினிகாந்த் வாய்திறக்காதது ஏன். என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

காவிரி பிரச்சினை
இந்த நிலையில் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் தொழில் பிரச்சினைக்காக பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் காவிரி பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.

தமிழிசை விமர்சனம்
அவர்கள்தான் அந்நிய சக்திகளின் தூதவர்கள் போல் செயல்படுகின்றனர் என்றார் தமிழிசை. காவியின் தூதுவர் என ரஜினி மீது விமர்சனம் எழுந்ததை அடுத்து தமிழிசை, பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications