For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலைவாணர் அரங்கிற்குள் போக வாக்குவாதம்... ஆளுநர் மாளிகையில் மோடியை சந்தித்தார் தமிழிசை!

பிரதமர் நரேந்திர மோடியை இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திக்கிறார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்துள்ளார்.

சென்னையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை திட்டமான அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி ஆளுநர் மாளிகை சென்றடைந்துள்ளார்.

Tamilisai soundarrajan going to meet PM today at Raj bhavan

இன்று இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி நாளை காலையில் புதுச்சேரி புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் உள்ளே போலீசார் அனுமதிக்காததால் அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு தமிழிசை மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஓய்வெடுக்கும் பிரதமரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்பி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது இந்தி பிரசார சபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்தார்.

English summary
Tamilisai Soundarrajan and Ila. Ganesan is going to meet PM Modi at tn raj bhavan chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X