கட்சி அறிவிப்பை நடு இரவில் வெளியிட்டது ஏன்?.. கமலுக்கு தமிழிசை கேள்வி
அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமலின் அரசியல் அறிவிப்பிற்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். புதிய முயற்சியில் ஈடுபடும் கமலுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ''கமல் தன்னுடைய கட்சி அறிவிப்பை நள்ளிரவில் வெளியிட்டு இருக்கிறார். ஏன் இரவில் கட்சி குறித்து அறிவித்தார் என்று தெரியவில்லை'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதேபோல் ''அரசியலுக்கு வந்து மக்களுக்காக எப்படி குரல் கொடுக்கிறார் என்று பார்ப்போம். அவர் மக்கள் பிரச்சனைகளில் நிறைய தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வளவு நாள் சினிமாவில் இருந்துவிட்டு அரசியலுக்கு வருவது சரிப்பட்டு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''சினிமாவில் இருக்கும் பிரபலத்தை அரசியலில் தக்க வைக்க முடியுமா என்பதையும் இனிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications