இலங்கை சிறையில் இருக்கும் 60 மீனவர்களை விடுவியுங்கள்... பிரதமருக்கு எடப்பாடியார் கடிதம்!
இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 60 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை சிறையில் உள்ள 60 மீனவர்களை விடுவிக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கியும் கைது செய்தும் வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொதுவான பாரம்பரிய மீன்பிடி பகுதியில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள் எனக் கூறி கைது செய்து அவர்களுக்கு ரூ.2 முதல் ரூ 20 கோடி வரைக்கும் அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 60 மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடி வருகின்றனர். இவர்களை மீட்டுத் தர வேண்டும் என அவர்களது குடும்பத்தார் முதல்வருக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 60 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாகவே மத்திய வெளியுறவுத்துறை, வேறுநாடுகளில் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்களை எப்படியாவது மீட்டுக்கொண்டு வந்து விடுகிறது. ஆனால், தமிழக மீனவர்களை மீட்பது குறித்து தயக்கம் காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications