தமிழக ஆட்சியை இயக்கும் ரிமோட் பெங்களூர் சிறையில் இருக்கிறது- ஸ்டாலின்
தமிழக அரசை இயக்கும் ரிமோட் பெங்களூரு சிறையில் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி: தமிழக அரசை இயக்கும் ரிமோட் பெங்களூரு சிறையில் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடப்பதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் அதன் நிறைவாக உரையாற்றினார்.

அப்போது திமுகவின் சுயநலத்துக்காக உண்ணாவிரதம் நடத்தப்படவில்லை என்ற தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சியை அப்புறப்படுத்தவே போராட்டம் நடத்தப்பட்டதாக கூறினார்.
வருங்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். தமிழக அரசை இயக்கும் ரிமோட் பெங்களூரு சிறையில் இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications