தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்.. காவிரி பற்றி ஆலோசனை செய்ய முடிவு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று இரவு டெல்லி செல்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி போராட்டம், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரவு 7.10 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் பற்றி மத்திய அரசிடம் பேச முடிவு செய்துள்ளாதாக கூறப்படுகிறது.
போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனைகள் நடத்தியதன் பேரில் இன்று டெல்லி செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications