நாடுமிகச் சிறந்த மனிதரை இழந்து விட்டது... அப்துல்கலாம் மறைவுக்கு ஆளுநர் ரோசையா இரங்கல்...
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு, தமிழக ஆளுநர் ரோசையா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கலாம் மறைவு, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்பட்டபேரிழப்பு என்று கூறியுள்ளார்.

மக்களின் தலைவராக விளங்கிய அப்துல் கலாம், இளைஞர்கள் மனதில் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் என்ற சுடரை ஏற்றியவர் எனவும் ரோசையா கூறியுள்ளார்.
மிகச் சிறந்த மனிதரை, நிர்வாகியை, சிறந்த ஏவுகளை விஞ்ஞானியை, மனிதாபிமானம் மிக்கவரை இந்த நாடு இழந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கலாமின் மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்திய நாட்டுக்கே பேரிழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் ஆளுநர் ரோசையா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications