மாவட்ட கவுன்சிலர்களை தட்டி தூக்கிய திமுக.. ஒன்றிய கவுன்சிலர்களை அள்ளிய அதிமுக.. தேர்தலில் டிவிஸ்ட்
உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் யாரும் கணிக்காத அளவில் முடிவுகள் வெளியாகி வருகிறது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் யாரும் கணிக்காத அளவில் முடிவுகள் வெளியாகி வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு முழுமையான முடிவுகள் தெரிய வரும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.

அதிமுக வாய்ப்பு
இந்த தேர்தலில் அதிமுகதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. அதிமுக இந்த தேர்தலுக்காக முன்பில் இருந்தே தீவிரமாக தயாரானது. தீவிர பிரச்சாரம் செய்தது. ஆனால் திமுகவோ தேர்தலுக்கு எதிராக வழக்குகளை தொடுத்து, கடைசி வரை தேர்தலில் கவனம் செலுத்தவில்லை.

திமுக நிலை
இதனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும். அதிமுக பெரிய அளவில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய அரசியல் வல்லுனர்களின் கணிப்புகளும் அதைத்தான் உறுதிப்படுத்தியது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது.

மாவட்ட கவுன்சிலர்
அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் பின்வரும் நிலவரம் நிலவி வருகிறது. இதில் திமுக முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் - 515
திமுக - 80
அதிமுக - 61
மற்றவை - 1

ஒன்றியம்
ஆனால் இன்னொரு பக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் - 5090
அதிமுக - 193
திமுக - 165
மற்றவை - 14

பெரிய போட்டி
இதில் திமுக, அதிமுக இடையே மிக கடுமையாக போட்டி நிலவுகிறது. இரண்டு தேர்தலிலும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. அதிமுகவும் தன்னுடைய வாக்கு வங்கியை இழக்கவில்லை. திமுகவும் மக்கள் இடையே நம்பிக்கையை இழக்கவில்லை. திமுக, அதிமுக ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பது தேர்தல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

திமுக கொஞ்சம்
பொதுவாக நகராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கு அருகே மாவட்ட கவுன்சிலர் தொகுதிகளில் திமுகதான் அதிகமாக முன்னிலை வகிக்கிறது. அங்கு மக்கள் திமுகவிற்கே அதிக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தால் அதில் திமுக முன்னிலை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications