தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சனிக்கிழமை மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யலாம், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இவ்வாறு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னையில் இன்று அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியசை ஒட்டி இருந்தது. மதுரையில் அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியசையும், கோவையில் 32 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருந்தது.












Click it and Unblock the Notifications