சீட் பெல்ட் அணியாமல் 'பைக்' ஓட்டியதற்கு அபராதம்.. தஞ்சை போலீசின் அதீத கடமை உணர்ச்சி
சீட் பெல்ட் அணியாமல் பைக் ஓட்டியதற்கு அபராதம் விதித்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தஞ்சை: வாகன தணிக்கையின்போது சீட் பெல்ட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீஸார் அடிக்கடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த வாகன சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கூறி போலீஸார் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை விவசாயி
தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காட்டை சேர்ந்தவர் பாண்டியராஜ் (29). கூலி வேலை செய்யும் விவசாயி. தஞ்சை மாரியம்மன்கோவில் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள கூட்டுறவு வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தஞ்சை போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

வாகனத்தை நிறுத்தினர்
அப்போது பாண்டியராஜனின் வாகனத்தை நிறுத்தினர். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. ஹெல்மெட்டும் வைத்திருந்தார். ஆனால் போலீஸாரோ சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி அபராதம் செலுத்த கூறினார். அதிலும் நீதிமன்றத்துக்கு சென்றால் ரூ.2500 என்றும் இங்கே செலுத்தினால் ரூ. 500 மட்டும் கொடுக்க வேண்டும் என்று போலீஸார் கூறியதாக தெரிகிறது.

ரசீது தரவில்லை
போலீஸார் வண்டி சாவியை எடுத்துக் கொண்டதால் வேறு வழியில்லாமல் அவர் ரூ.500 செலுத்தி வண்டியை எடுத்து வந்தார். இந்நிலையில் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு கொடுத்தார்.

நடவடிக்கை எடுங்கள்
அந்த மனுவில் நடந்த சம்பவங்களை கூறிய பாண்டியராஜன், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போலீஸார் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications