கணக்கு சரியாக போடாததால் மாணவனை அடித்த ஆசிரியர் கைது!
Subscribe to Oneindia Tamil
பாளை: பாளையங்கோட்டையில் மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் மாடசாமி. பாளையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், கணக்கு சரியாக போடவில்லை எனக் கூறி கணித ஆசிரியர் ராஜசேகர் என்பவர் அவரை தாக்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து காயமடைந்த மாடசாமி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆசிரியர் ராஜசேகர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications