செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்! - வீடியோ
ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏழை இளைஞர்களை கூலி வேலைக்கு என ஆந்திராவுக்கு அழைத்து செல்லும் அம்மாநில தொழில் அதிபர்கள் அவர்களை சட்டவிரோதமாக செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

மரம் வெட்டும் கூலித்தொழிலாளிகளை கைது செய்யும் போலீசார் அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் செம்மரம் கடத்தப்படுவதாக சித்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சித்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். மேலும் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications