சென்னையில் நாளை டெசோ அவசர கூட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக உருவாக்கிய தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பான டெசோவின் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு கூட்டத்தில் முதல் அமர்வில் முதல் நபராக போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேச இருக்கிறார். இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் திமுக உருவாக்கிய டெசோவின் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் ஐ.நா. கூட்டத்தில் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications