திருச்செந்தூர் மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி - ராதிகா
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்செந்தூர் மக்களின் அன்பு, பாசத்திற்கு நன்றி என நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார்.
அதிமுக கட்சி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் 26௦௦௦ வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

தொகுதி மாறி போட்டியிட்டது, சரத்குமாரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் போன்றவை சரத்குமாரின் வெற்றிவாய்ப்பைக் குறைத்ததில் பெரும்பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகா ''திருச்செந்தூர் மக்கள் காட்டிய அன்பு, பாசத்திற்கு நன்றி. இந்தத் தேர்தலில் நாங்கள் தோற்றதாகக் கருதவில்லை.
மீண்டும் வெற்றிக்குப் போராடும் ஒரு வாய்ப்பாகத்தான் கருதுகிறோம்'' என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications