ஐஜியை விசாரிங்க.. டிஜிபியையும் விசாரிங்க.. அமைச்சரை விட்டுட்டீங்களே.. அட முதல்வருக்கே சிக்கல்ப்பா!
ஊழலில்டிஐஜி, ஐஜி, அமைச்சர், முதலமைச்சர் என அனைவருமே சிக்கியுள்ளனர்.
சென்னை: அன்று மட்டுமல்ல, என்றுமே பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி சட்டம் ஒரு இருட்டறைதான் போலும்!!
குற்றத்திற்கான தண்டனைகள் தற்போது யாருக்கும் முறையாக கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் அந்த குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கூட இல்லாமல் இந்த சமூகம் மாறிவிட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, தமிழகத்தில் இருக்கும் துறைகளிலேயே மாறுபட்ட ஒரு துறை. ஆனால் இதுவரை இந்த துறையில் ஊழல் சம்பந்தமான புகார்கள், முறைகேடுகள்தான் வந்திருக்கின்றன. ஆனால் முதல்முறையாக ஒரு பாலியல் புகார் இந்த துறையில் எழுந்துள்ளது. அது லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி தனக்குக் கீழ் பணியாற்றிய ஒரு பெண் எஸ்பியிடம் முறைகேடாக நடக்க முயன்றார் என்பதே.

விசாகா கமிட்டி
உண்மையிலேயே இப்படி ஒரு புகார் வந்ததும் அரசு தரப்பில் அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். எனினும் இதை கண்டுக்காமல் விடவும் முயற்சி நடந்திருக்கும். ஆனால், திமுக மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி, தமிழக காவல்துறையில் ஏன் விசாகா கமிட்டி இல்லை என்று கேள்வி எழுப்பிய பிறகே, இது சம்பந்தமாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்டாலும் அந்த கமிட்டிக்குள் எக்கச்சக்கமான பிரச்சனைகள் போய்க் கொண்டுதான் இருக்கின்றன.

வரலாறு காணாத ரெய்டு
இப்படி காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் மற்ற பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளளின் கதி என்ன? பாதுகாப்பு நிலை எப்படி? ஆனால் இதனை விசாரிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முதலில் டிஜிபிக்குத்தான் உண்டு. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், புகாரை விசாரிக்க வேண்டிய டிஜிபியே ஊழலில் சிக்கியுள்ளதாக புகாருக்குள்ளாகியுள்ளார். இது சம்பந்தமாக "வரலாறு காணாத ரெய்டு" என்றே ஒரு பெயரும் உருவாகிவிட்டது. பதவியும் விலகவில்லை, அரசும் அவரை டிஸ்மிஸ் செய்யவில்லை, புகாருக்கு என்ன நடவடிக்கை என்றும் தெரியவில்லை. இப்படி இருக்கும்போது, டிஜிபி ராஜேந்திரன் எப்படி ஐஜியை புகாரை விசாரிக்க முடியும்?

திமுக வழக்கு
சரி, டிஜிபியை விசாரிக்க வேண்டியது முதமைச்சர்தானே? காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர்தானே இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆனால் அங்கும் ஒரு காலக் கொடுமையைப் பாருங்க.. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு தொங்கிக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு பற்றி கோர்ட்டில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.

நூதனமான சூழல்
இப்படி ஐஜியை விசாரிக்க வேண்டிய டிஜிபி மீது புகார், டிஜிபியை விசாரிக்க வேண்டிய முதல்வர் மீது புகார், முதல்வர் விசாரிக்க வேண்டிய அமைச்சர் மீதும் புகார் என படு வித்தியாசமான நூதனமான சூழலை தமிழகம் முதல்முறையாக சந்தித்துள்ளது...!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications