கூடங்குளம் 2வது அணு உலையில் மே முதல் உற்பத்தி தொடங்கும் - வளாக இயக்குநர் தகவல்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அணு உலையில் மே மாதம் முதல் உற்பத்தி தொடங்கும் என கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

The koodankulam 2nd phase nuclear reactor power production start on may

இந்நிலையில் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.

இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்காக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது ஒப்புதல் அளித்தவுடன் மே மாதத்தில் மின் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 3 வது மற்றும் 4 வது அணு உலைகளை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் சுந்தர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+